உக்கிரைனுக்கு ஆயுதங்களை கொடுக்க வந்தால், கொடுக்க வரும் படையை நாம் தாக்க வேண்டி இருக்கும் என்று ரஷ்யா கடுமையாக எச்சரித்துள்ளது. போலந்தில் இருந்தும், ஜேமனி , பிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவில் இருந்து, பெரும் ஆயுதங்கள் உக்கிரைனுக்கு சொன்று கொண்டு இருக்கிறது. இதனை தடுக்கவே ரஷ்யா இவ்வாறு தெரிவித்துள்ளது. உக்கிரைனில் வைத்து ரஷ்யா பிரித்தானிய விமானத்தை தாக்குமாக இருந்தால், அது நேட்டோ நாடுகளை நேரடியாக பகைக்கும் விதமாக இருக்கும். இதனால் பிரித்தானியா அமெரிக்கா தொடக்கம் 25 ஐரோப்பிய நாடுகளும் இணைந்து ரஷ்யாவை தாக்க நேரிடும். இது 3ம் உலகப் போருக்கு வழி வகுக்கும்.