மகிந்தவின் காடையர் குழு, காலி முகத்திடலில் உள்ள மக்களை தாக்கும் போது. அங்கே தோன்றிய நிலையை பார்வையிட என எதிர் கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸாவும் JVP தலைவர் அனுராவும் சென்றுள்ளார்கள். இதனைப் பாவித்து மக்கள் மத்தியில் தனது சொல்வாக்கை உயர்த்தவே இவர்கள் இவ்வாறு ஒரு நாடகம் ஆடினார்கள். ஆனால் அங்கே நின்ற மக்கள் நல்ல பதிலடி கொடுத்து விட்டார்கள். எங்களுக்கு ஆழும் கட்சியும் வேண்டாம் ….! எதிர் கட்சியும் வேண்டாம் …. ! 3 வயது கட்சியும் வேண்டாம் …. ! புதிதாக ஆட்கள் ஆட்சிக்கு வரவேண்டும் ! படித்தவர்களாக , நிர்வாக திறமை உள்ளவர்களாக அவர்கள் இருக்கவேண்டும் என்பதே மக்களின் ஒருமித்த குரலாக உள்ளது. இதில் அவர்கள் மிக மிக தெளிவாக உள்ளார்கள். இன் நிலையில்…
கூட்டத்தில் நின்ற நபர் ஒருவர் கடுப்பாகி கல்லை எடுத்து எறிய, அது சஜித்தின் மண்டையை பதம் பார்த்தது. இது போக மற்றுமொரு கல் அனுராவை தாக்க இருவரும் ஓடிப் போய் காரில் ஏறி அங்கே இருந்து தப்பி ஓடிய காட்சிகள், பதிவாகியுள்ளது.