ஒன்றாக இருந்தபோது எடுத்த புகைப்படங்களை பரப்பிய காதலன்! மதம் மாறாததால் காதலிக்கு கொடுத்த தண்டனை

இந்த செய்தியை ஷியார் செய்ய

இந்து மதத்தைச் சேர்ந்த அந்த இளம் பெண் தனது இஸ்லாம் மதத்திற்கு மாறாததால் ஆத்திரமடைந்த காதலன் இருவரும் ஒன்றாக இருந்தபோது எடுத்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பரப்பி இருக்கிறார். இதனால் போலீசில் புகார் அளிக்க, காதலர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூரைச் சேர்ந்தவர் இமான் ஹமீப். இவர் கரூரைச் சேர்ந்த 21 வயது இளம்பெண்ணை காதலித்து வந்திருக்கிறார். திருப்பூரில் இரண்டு மாதங்கள் இருவரும் ஒன்றாகவும் வசித்து வந்திருக்கிறார்கள். அப்போது அந்த பெண்ணை மதம் மாறுமாறு இமான் ஹமீப் வற்புறுத்தி இருக்கிறார். தனது மதத்திற்கு அப்பெண்ணை மாறச்சொல்லி இருக்கிறார். இதை ஏற்காத அந்த பெண் இமான் ஹமீப்பை விட்டு பிரிந்து சென்றிருக்கிறார்.

இதனால் ஆத்திரமடைந்த இமான் ஹபீப் அந்த பெண்ணுடன் ஒன்றாக இருந்தபோது எடுத்த புகைப்படங்களை வலைத்தளங்களில் பரப்பி வந்திருக்கிறார். இதைக் கண்டு அதிர்ந்து போன அந்த இளம் பெண், கடந்த நாலாம் தேதி அன்று திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ளனர் நல்லூர் போலீசார்.

சாதிப் பெயரைச் சொல்லி திட்டியது, பெண்ணை கொடுமை செய்தது, அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பரப்பியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து இமான் ஹமீப்பை கைது செய்துள்ளனர். அவரிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.


இந்த செய்தியை ஷியார் செய்ய